Press "Enter" to skip to content

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கிச் சூடு..! 4 பெண்கள் உட்பட 9 பேர் படுகாயம்..

தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரின் துப்பாக்கியை பறிக்க முயன்றவர்கள் மீது மற்றொரு பாதுகாப்பு ஊழியர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு துறைமுகத்தின் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புளூமெண்டல் தோட்டத்தைச் சேர்ந்தவர்களே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்களில் 4 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் 06 ஆவது நுழைவாயிலுக்கு அருகில், துறைமுகத்திற்கு சொந்தமான இரும்புகளை திருட வந்ததாக கூறப்படும்  இருவரை விசாரணை செய்தபோது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் அங்கு வந்த அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது, தனியார் பாதுகாப்பு  பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பறிக்க சிலர் முயற்சித்த சந்தர்ப்பத்தில், மற்றுமொரு பாதுகாப்பு  உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *