சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால் 3 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம், நிலநடுக்கத்தின் மையப் பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடுகள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு பல்வேறு அளவிலான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment