Press "Enter" to skip to content

விகாரையை அகற்றும் வரை தொடர் போராட்டம் – காவல்துறை குவிப்பு!

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் போராட்டம்

விகாரையை அகற்றும் வரை தொடர் போராட்டம் - காவல்துறை குவிப்பு! | Sri Lanka Jaffna Thaiyiddy Buddhist Temple Protest

 

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

14 குடும்பங்களுக்கு சொந்தமான 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை குவிப்பு

விகாரையை அகற்றும் வரை தொடர் போராட்டம் - காவல்துறை குவிப்பு! | Sri Lanka Jaffna Thaiyiddy Buddhist Temple Protest

இதேவேளை குறித்த இடத்திலேயே கொட்டகை அமைத்து,  எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

போராட்டம் காரணமாக விகாரை முன்பாக சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *