Press "Enter" to skip to content

களுத்துறையில் 16 வயது யுவதி நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு!

களுத்துறை தெற்கு – காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் நேற்று (6) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் களுத்துறை – நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதி நேற்று மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் குறித்த விடுதிக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் விடுதியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

அதில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் யுவதியுடன் இருந்த மற்றைய இளைஞரும் வெளியேறியதாகவும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், விடுதிக்கு பின்னால் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்தக் குழுவில் உள்ள மற்றைய ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த யுவதியுடன் இருந்த இளைஞனைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *