பிரான்சுக்கு அனுப்புவதாக தெரிவித்து இளைஞர் யுவதிகளிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் கடவுச்சீட்டுகள் என்பவற்றை பெற்று மோசடி செய்த ஒருவர் கட்டுநாயக்க காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார்.
ராகமை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக காவல்துறையினருக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்துடன் பொலன்னறுவை, வீரகுல மற்றும் ராகமை உள்ளிட்ட காவல்துறை நிலையங்களில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவானிடம் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
Be First to Comment