ஆளுநர்கள் அரசியலமைப்பின் ஒரு பகுதி என்றும், அவர்கள் பல வழிகளில் கடமைப்பட்டுள்ளவர்கள் என தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அந்த கண்ணியத்தை நான் காப்பாற்றியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
தமது பதவி விலகலை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கில் 401,000 குடும்பங்களுக்கு, ஏழைகள், நிலமற்றவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையவர்கள், மாகாண அரச ஊழியர்கள், TRI சேவைகள், பொலிஸ், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், மாகாணத்தில் வேரூன்றியவர்கள், மற்றும் முதலீட்டாளர்கள், தொழிலாளிகள், வர்த்தகம், நல்லெண்ணம் மற்றும் செழிப்புக்கான எனது உண்மையான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அதேவேளை பொதுப்பணியில் இருப்பவர்கள் ஒரு தடவை வந்து எப்பொழுதும் மீள சென்று விடுவார்கள் எனவும் முன்னாள் ஆளுநர் ஜீவன்தியாகராஜா தெரிவித்துள்ளார்.
Be First to Comment