Press "Enter" to skip to content

தயார் சுகயீனமடைந்துள்ளதாக கூறி 10 வயது சிறுமியை கடத்துவதற்கு முயற்சி!!

தாயாருக்கு சுகயீனம் என கூறி 10 வயது சிறுமியை கடத்த முயற்சித்த நிலையில் சிறுமி தனது புத்திசாதுரியத்தால் தப்பித்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

பண்டாரவளை நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 19 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ்ஸுக்காக குறித்த மாணவி தனியாக நடந்து சென்றபோது தொலைவில் வெள்ளை நிற வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.பின்னர் கறுப்புத் துணியால் முகத்தை மூடியிருந்த இளைஞர் ஒருவர் வேனில் இருந்து இறங்கி மாணவியின் அருகில் வந்து ‘

உனது தாயார் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சொக்லேட்டை உனது தாயார் உன்னிடம் கொடுத்து தன்னுடன் வேனில் வரச் சொன்னதாகவும்’ அந்த மாணவியிடம் கூறியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அச்சமடைந்த மாணவி பண்டாரவளை நகரில் உள்ள கடைக்கு ஓடிச் சென்று தனது நிலையைக் கூறியுள்ளார். அதனையடுத்து இது தொடர்பில் தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *