Press "Enter" to skip to content

வாகன இறக்குமதி தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

மிக விரைவில் மீண்டும் ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவரும் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *