யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே நேற்றையதினம் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட மேலும் சில போதைப்பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நால்வரையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Be First to Comment