பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில்உள்ள கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடு.
கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன்
ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்
கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஐயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஐயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்த நிலையில் இன்றுமாலை
ராணுவத்தினரின் அனுமதியுடன்உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள குறித்த ஆலயத்தினை ஆலய பூசகர்கள் சென்று பார்வையிட்டதோடு ஆலயத்தில் பூசை வழிபாடுகளும் குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது,
Be First to Comment