கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்கின்றோம்.
அந்த முயற்சிகளுக்கு கடற்றொழில் அமைச்சும், எமது நெக்டா நிறுவனமும் கூடுதல் கவனமெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
.
தப்பிரபோன் நிறுவனத்தினரால் கொழும்பில் இன்று (07.10.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அக்கியுவா பியஸ்டா” எனும் அலங்கார மீன்கள் கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
.
நன்னீர் வேளாண்மைக்காக நெக்டா நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நூறு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.
அந்த நிதியிலிருந்தும் அலங்கார மீன்வளர்ப்புத் துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கவுள்ளதாகவு தெரிவித்த அமைச்சர், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்மதித் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டியதுடன், தொடர்ந்தும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சுடன் இணைந்து செயலாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சின் செயலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
Be First to Comment