Press "Enter" to skip to content

காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைவு- யுனிசெப் கவலை

காசாவில் மோதல் நடைபெற்றுவரும் பகுதியில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக யுனிசெப் கவலை வெளியிட்டுள்ளது.

இது குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தடங்கலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அனைத்து போர்களை போலவே இந்த போரிலும் வெகுவாக பாதிக்கப்படுவது குழந்தைகளே எனவும் யுனிசெஃப்பின் நிறைவேற்று அதிகாரி கத்தரின் ரசல் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரத்தைத் துண்டிப்பது, உணவு, எரிபொருள் மற்றும் நீரை காசாவுக்குள் கொண்டு செல்வதை தடுப்பது குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *