கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவு விழா கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் நாளை புதன்கிழமை காலை 08.30 மணயளவில் இடம்பெறவுள்ளது.
கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கலந்து சிறப்பிக்கவிருப்பதுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவுள்ளார்.
நிகழ்வில் கலாசாலையின் நூற்றாண்டு சஞ்சிகையான கலைமலர் வெளியீடு, அஞ்சல் திணைக்களத்தின் 25 ரூபா முத்திரை வெளியீடு, முதல் நாள் அஞ்சல் உறை வெளியீடு, முன்னாள் முதல்வர்களின் கௌரவிப்பு என்பன இடம்பெறவுள்ளன.
Be First to Comment