Press "Enter" to skip to content

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் கப்பல்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பமானது.

இதன் முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக, கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையில் இந்த பயணிகள் கப்பல் சேவை இடம்பெறுகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்து 50 பயணிகளுடன் கப்பல் இன்று காலை 11.30 மணி அளவில் காங்கேசன்துறை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *