Press "Enter" to skip to content

விடுதலை புலிகளை கொடூரமான பாசிச அமைப்பு என விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் – வீடியோ

காலிமுகத்திடல் போராட்டத்தின் தலைவர் தமிழீழ விடுதலை புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கக்கொடிகளை ஏந்தி காலிமுகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழ் சட்டத்தரணி ஒருவர் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு,  புலிகளை ஒரு கொடூரமான பாசிச அமைப்பு எனக் கண்டித்துள்ளார்.

கொழும்பு சிவில் சமூகத்தின் முக்கிய பிரமுகரான ஸ்வஸ்திகா அருலிங்கம், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தனது கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

விடுதலை புலிகளை கொடூரமான பாசிச அமைப்பு என விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் - வீடியோ
விடுதலை புலிகளை கொடூரமான பாசிச அமைப்பு என விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம்

விடுதலைப் புலிகளை “தமிழ் சமூகத்திற்குள் புற்றுநோய்” எனவும் அவர் அழைத்தார்.

ஈழப்போராட்டம் தொடர்பாக சிங்களத்தில் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் பற்றி விவாதிக்க, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வின் ஆரம்பமாக மாகாண சபைகளுக்கு ஆதரவளிக்கும் நவ சமசமாஜக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக கட்சியிலிருந்து பிரிந்து ஐக்கிய சோசலிசக் கட்சியை உருவாக்கிய சிறிதுங்க ஜயசூரியவினால் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *