Press "Enter" to skip to content

சீரற்ற காலநிலை காரணமாக நாளை மூடப்படும் பாடசாலைகள்!

சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரவளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட மக்கள்தெனிய மற்றும் மீரியபெத்தை ஆரம்ப பிரிவு பாடசாலைகள் நாளைய தினம் மூடப்படவுள்ளன.

பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எனினும், கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அந்த பாடசாலையின் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த வலயத்தில் அனர்த்தத்துக்கு உள்ளாகக்கூடிய நிலையிலுள்ள பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குரிய அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக, பண்டாரவளை கல்வி வலயத்தில் தங்களது பாடசாலைகளுக்கு செல்ல முடியாத மாணவர்கள், தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியுமெனவும் பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *