Press "Enter" to skip to content

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக்கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ் மொழிக்கு மாற்றப்படுவதுடன் ஏனைய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் (ஸ்மார்ட்) வகுப்பறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கல்லூரியின் பழைய மாணவனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி கற்ற காலத்தில் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் கல்லூரி கீதத்தினை மனனம் செய்து பாடியதாக தெரிவித்ததுடன், கீதத்தின் அர்த்தத்தினை புரிந்துகொள்ளுகின்ற போதே, உணர்வு ரீதியான பிணைப்பையும் அர்ப்பணிப்பு,மனப்பக்குவத்தையும் மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *