Press "Enter" to skip to content

அஸ்வெசும கொடுப்பனவு புதன்கிழமை

ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் 1 ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அன்றைய தினம் குறித்த பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *