Press "Enter" to skip to content

நடந்து சென்ற மின்சார சபை ஊழியர் மீது ஹயஸ் மோதியதில் பலி!

வவுனியா – மன்னார் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள பாதைசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்ற மின்சார சபை ஊழியர் மீது, பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதான நௌபர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த ஊழியர் முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரிந்ததுடன் வவுனியா, குருமன்காடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தில் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *