Press "Enter" to skip to content

யாழ் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில்1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை இன்றிலிருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றது

அசிஸ்ட் ஆர் ஆர் பிரித்தானியா அன் இலங்கை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டிகீழ்

புனர்வாழ்வும் புதுவாழ்வும் நிறுவனத்தின் அனுசரனையில்

உலக பார்வை தினத்தை முன்னிட்டுயாழ்ப்பாணம் இரத்தினபுரி வைத்தியசாலைகளின் நல்லுறவினை மேம்படுத்தும் முகமாக  இம்மாதம்  30ம் திகதி   தொடக்கம் மூன்றாம் திகதி வரை யாழ் போதனா

வைத்தியசாலை கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவனின் நெறிப்படுத்தலில் கண் சிகிச்சை பிரிவில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான செயற்  திட்டத்தின் கீழ்

இன்று காலை ஆரம்பமான கண் புரை சத்திர சிகிச்சையில் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து 50க்கும் மேற்பட்டோரும் மற்றும் அனுராதாபுரம் மதவாசி பதவியா பகுதிகளில் இருந்து 170 க்கும் மேற்பட்டோருக்கு இன்றைய தினம்  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

எதிர்வரும் நாட்களிலும் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு கண்புரை  சத்திர சிகிச்சை மேற்கொள்ளவுள்ளது,.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *