Press "Enter" to skip to content

வடக்கில் 70 வீதமாக எகிறியது பாடசாலை இடை விலகல் வீதம்!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற மூன்று மணி நேர கலந்துரையாடலின் போது வட மாகாணம் தொடர்பான இரண்டு முக்கிய விடயங்களை அறிந்து கொண்டதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.

அதாவது இன்றைய கலந்துரையாடலின் போதுஎமது வடக்கு மாகாணத்தில் 70 வீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை நிறுத்தி இடைவிலகிள்ளதாகவும் அதே போல ஆரம்ப பிரிவு மாணவர்களிடையே தாங்களாக வாசிக்கும் எழுதும் திறனற்ற மாணவர்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் இன்றைய கூட்டத்தில் என்னால் அறியக் கூடியதாக இருந்தது

அரசாங்கமானது பெருமளவு நிதியினை கல்விக்காக ஒதுக்குகின்றது அவ்வாறு இருக்கும் போது இளம் வயதினர் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட வேண்டும்

அத்தோடு ஆரம்ப பிரிவு மாணவர்களின் சுயமாக வாசிக்கும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அத்தோடு இந்த விடயமானது அனைவரையும் சென்றடைவதன் இந்த விடயம் கவனிக்கப்பட்டு ஏதாவது மாற்ற நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது எனவும் தெரிவித்தார்,

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *