Press "Enter" to skip to content

கண்டாவளை பிரதேச மக்களுக்கு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கான காணி அளிப்பு பத்திரங்களை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 137 பயனாளர்களுக்கான காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இதுவரையில் சுமார் 600 மேற்பட்ட காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *