Press "Enter" to skip to content

யாழ் வரும் இந்திய நிதி அமைச்சரை மீனவ பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளனர்!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற இந்திய மத்திய அமைச்சரை சந்தித்து அவருக்கு நாங்கள் எதிர்நோக்கும் அவலங்களை தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர்தெரிவித்தார்,

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு நாளை மறுதினம் வருகை தருகின்ற இந்திய மத்திய நிதி அமைச்சரை சந்தித்து இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் அழிக்கப்படுபவை தொடர்பில் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளிக்கவுள்ளதோடு

எதிர்வரும் காலங்களில் தமிழகத்திற்கு சென்று தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீனவர்ளுக்கு எங்களுடைய அவலங்களை எடுத்துரைக்கவுள்ளோம் என தெரிவித்தார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *