Press "Enter" to skip to content

சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் பெரும் சேதமுள்ள பாலங்களாக அடையாளம்

யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் சேதமடைந்ததாக இனங்காணப்பட்டுள்ள பாலங்களில் சில தற்போது தற்காலிக திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு மிக மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள் பல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல பாலங்களும் காணப்படுவதாகவும் அவற்றை புனரமைப்பு செய்வதற்கான நிதி கோரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் பற்றாக்குறையான வருமானத்திலேயே இவற்றிற்கு நிதி ஒதுக்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *