Press "Enter" to skip to content

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

பலஸ்தீன மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் நேற்று (03) இடம்பெற்றது.

ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியிட்டதுடன், மேலும் பலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனையும் இதன் போது இடம்பெற்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *