Press "Enter" to skip to content

திம்புலாகல ஆரண்ய சேனாசனத்தில் 45 அடி நீளமுள்ள அரிய கல்வெட்டு!

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக அரிய மற்றும் மிகப் பெரிய கல்வெட்டு வரலாற்று சிறப்புமிக்க பொலன்னறுவை திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது.கல்வெட்டு 45 அடி நீளமும் 18 அடி உயரமும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் தலைமை அலுவலக கல்வெட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலன்னறுவை தொல்பொருள் ஆய்வுக் குழுவினர் இந்த அரிய கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்த கல்வெட்டை நகலெடுக்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என தொல்லியல் துறை குறிப்பிடுகிறது
More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *