Press "Enter" to skip to content

தெல்லிப்பழையில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம், பெண் ஒருவரை கொல்லவும் முயற்சி!

தெல்லிப்பழை – ஊரான்கூடை கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 3 பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்த பெண்ணை தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் இயற்கை உபாதைக்காக வீட்டுக்கு வெளியே சென்ற பெண்ணை கத்தி முனையில் பிடித்து அச்சுறுத்தியுள்ளனர்.

பின்னர் குறித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற நிலையில் அவர் கொள்ளையர்களுடன் தர்க்கப்பட்டு கொள்ளையன் ஒருவனின் முகமூடியை கழற்றி அவனை அடையாளம் கண்டுள்ளார். இதனால் கொள்ளையர்கள் குறித்த பெண்ணை அடித்து கொல்லும் நோக்குடன் தாக்கியுள்ளனர்.

எனினும் ஒருவாறாக தப்பிய பெண் வீட்டுக்குள் ஓடி கதவை பூட்டியுள்ளார். இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை இதுபோன்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் குறித்த பெண்ணின் வீட்டில் சமையல் எரிவாயு சிலின்டர் திருடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *