Press "Enter" to skip to content

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களால் பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நுழைவு வீதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு திட்டமிடப்பட்ட போராட்டத்தினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கவனத்திற்கொண்டு இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமைதியான போராட்டங்கள் இடம்பெறுவதற்கு தடைவிதிக்கப்படவில்லை என நீதிமன்றம் மேலும் வாதெரிவித்துள்ளது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *