Press "Enter" to skip to content

மட்டக்களப்பு மொட்டு கட்சி அமைப்பாளர் சஜித்துடன் இணைவு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று (11) இணைந்து கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் என்பவரே இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பிரதாய பூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கி வைத்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *