கொழும்பு – புதுக்கடை பகுதியில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்து ரொட்டியை 1,900 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு – புதுக்கடை பகுதியிலுள்ள ஈட் ஸ்ட்ரீட் (நுயவ ளுவசநநவ) எனப்படும் உணவகத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment